2025 ஜூன் 25, புதன்கிழமை

'இ.போ.ச பஸ்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் சட்ட நடவடிக்கை'

Thipaan   / 2015 ஜூலை 15 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர்,  செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உட்பட சாரதிகள் மற்றும் நடத்துனர்களுடன் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் அரச பஸ்களாகும். அதில் தேர்தல் பிரசாரத்துக்கு உரிய எந்தவொரு சுவரொட்டிகளையோ, துண்டுப் பிரசுரங்களையோ ஒட்ட முடியாது.

அப்படி ஒட்டப்படுமாக இருந்தால் அது தேர்தல் சட்டத்துக்கும் விதிகளுக்கும் முரணானதாகவே கருதப்படும். இந்த வகையில் தேர்தல் சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையும் அவசியமும் காணப்படுகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் கவனம் எடுக்க வேண்டும்.

தற்போது சில பஸ்களில் இத்தகைய தேர்தல் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவைகளையும் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .