Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஜூலை 17 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு மக்கள் முன்வந்து தெரிவிக்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்துக்கும் உதயகுமார வூட்லருக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, உதயகுமார் வூட்லர் இந்த வெண்டுகோளை விடுத்துள்ளார்.
மதுபானம் அருந்திவிட்டு வீதிகளில் பயணித்தல் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அவ்வாறு யாராவது செயற்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.
அத்துடன், போக்குவரத்து தொடர்பிலும் சீரான நடைமுறை போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் என்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
31 minute ago
38 minute ago