2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

24 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 22 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி ,  மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள், செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒரு படகுடன் நெடுந்தீவில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த 7ஆம் திகதி கச்சதீவு பகுதியில் கரையொதுங்கிய படகிலிருந்து 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
                                                                                                               
இதன்போது,  யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினூடாக 16 மீனவர்களும்   நெடுந்தீவு பொலிஸாரினால் 8 மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .