2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

41 வர்த்தகர்களுக்கு தண்டம் விதிப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள 41 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் இந்த மாதம் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர் அதிகார சபையினர் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தனர்.

மேற்படி அதிகார சபை அதிகாரிகளால் யாழ் மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் இந்த மாதத்தில் பரவலாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது நிறை குறைந்த பாண் விற்றமை உள்ளடங்கலாக காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை பொருட்களின் விலையை காட்சிப்படுத்தாமை மற்றும் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களை செய்த  47 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக அந்தந்த பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.

மேற்படி வர்த்தகர்கள் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டங்கள் விதித்து தீர்ப்பளித்ததாக சபையினர் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .