2025 ஜூலை 02, புதன்கிழமை

50 வர்த்தகர்களுக்குத் தண்டம் விதிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்.மாவட்டத்திலுள்ள 50 வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். நீதிமன்றங்களினால் கடந்த ஜுன் மாதம் மாத்திரம் 1 இலட்சத்து 79 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தனர்.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் பொருட்களின் விலைகளினை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களுக்காகவே மேற்படி வர்த்தகர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரினால் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன் பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட வர்த்தகர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதினையடுத்து அவர்களுக்கு நீதிமன்றங்கள் தண்டம் விதித்து உத்தரவிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .