2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

75,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

தனது விடுதி அறையில் வைத்திருந்த கைத்தொலைபேசி மற்றும் ஐபாட் உள்ளிட்ட சுமார் 75000 ரூபா பெறுமதியான பொருட்களை அறையின் பின்பக்க கதவினை உடைத்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி உமாசங்கர் சாந்திலோஜினி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை  (20) முறைப்பாடு செய்துள்ளார்.

திருட்டுச் சம்பவம் புதன்கிழமை (19) இடம்பெற்றதாகவும் விடுதியிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்ற சமயம் இந்தத் திருட்டு நடந்துள்ளதாகவும் வைத்தியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையிலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நோயாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டி திருட்டுப் போனதாகவும், அதனை அங்கிருந்த ஊழியர் ஒருவர் எடுத்தமையைக் கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .