2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

9 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய தந்தை கைது

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தனது 9 மாதக் குழந்தையை தலைகீழாகப் பிடித்து தாக்கியதுடன் மனைவியையும் கடுமையாகத் தாக்கிய யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை, இன்று திங்கட்கிழமை (11) காலை கைது செய்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியிருந்த மேற்படி சந்தேகநபர், இராஜகிராமம் பகுதிக்கு இன்று திங்கட்கிழமை (11) காலை வந்திருந்த சமயம் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் இராஜேஸ்வரன் தமிழ்ச்செல்வி (வயது 27) மற்றும் அவரது குழந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .