Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு நேற்று சனிக்கிழமை (20) விஜயம் செய்தார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் சேவை மூலம், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் ரயில் நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவையை மேம்படுத்துவது, மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.
அத்துடன், இரவு நேர தபால் சேவையின் மீள் ஆரம்பம், அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி ரயில் சேவை தரித்தல் என இந்தச் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அமைச்சர் அறிவித்தார்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago