2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அளவெட்டி கனி மீது வாள் வெட்டு

Princiya Dixci   / 2022 மே 18 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், தொட்டிலடி பகுதியில் வைத்து அளவெட்டியைச் சேர்ந்த "அளவெட்டி கனி" எனும் அழைக்கப்படும் 37 வயதுடைய நபர் மீது வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (17) இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த கனி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நபர் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு அளவெட்டி கனி வந்த போது, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட குழுவே  வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .