Editorial / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்.மாநகர சபை முதல்வர் ஆனோல்டை, முதல்வராகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ். மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டார்.
குறித்த வழக்கில், யாழ். மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கே.சயந்தன் ஆகியோரும் மனுதாரரான யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025