Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 21 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய அரசியலிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் ஆரம்பப் புள்ளியாக, இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் பார்ப்பதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், வலிமேற்கு பிரதேசபைக்கான வேட்புமனுவை, நேற்று (20) தாக்கல் செய்தப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“2010ஆம் ஆண்டில் இருந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது, மாற்றத்துக்காகப் போராடி வருகின்றது. புதிய அரசியல் திருத்தம் கொண்டுவரப்படவுள்ள நிலையில், மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பப் புள்ளியாக இதனை பார்க்கின்றோம்.
“தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் தமிழ்த் தலைமைகளின் செயற்பாடு அத்துமீறி சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில்,
இதற்கு மேலும் தமிழ் மக்கள் பொறுத்திருந்தால் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்றார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago