2025 மே 19, திங்கட்கிழமை

ஆவா குழுவை சேர்ந்தவர் நீதிமன்றில் சரண்

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆவா குழுவை சேர்ந்தவர் என கூறப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் எனும் நபர் தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று (28) சரணடைந்துள்ளார்.

மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் குறித்த நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இதேவேளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் குறித்த நபரின் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்தவர் இன்று (28) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X