Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
“வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் சுட்டி காட்டி நிற்கின்றன” என யாழ்.ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையி;ல், மிக அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைகளின்படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத்தவிர கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டி காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஆன்றோர் வாக்குக்கு ஒப்ப தமிழ் மக்களின் இன்றைய நிலை - அவர்களின் அவசிய தேவைகள் - முன்னுரிமைகள் என்பவற்றை கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்கள் பெயரால் வேண்டி நிற்கிறோம்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
43 minute ago
1 hours ago