2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 19 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 05 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த 19 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், இன்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டார்.

நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 2 விசைப்படகுகளுடன், கடந்த ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் 1 விசைப்படகுடன், கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களுக்குமே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .