2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஒக்டோபர் 11 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு கடற்பிரந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் நேற்று முன்தினம் (09) இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து, அவர்ள் ஏழுபேரும் நேற்று (10) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X