Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், செந்தூரன் பிரதீபன்
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
நேற்றுமுன்தினம் இரவு நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் நாகை மாவட்டம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து மீனவர்களை கடற்படையினர், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யது ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது, நீதவான் ஏ.யூட்சன் இவ்வாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
15 May 2025