2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எரிபொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது

Freelancer   / 2022 ஜூன் 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்திக்க ராமநாயக்க)

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உரிமம் இன்றி 630 லீற்றர் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்.முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (24) இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதுடைய இளைஞர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .