2025 ஜூன் 28, சனிக்கிழமை

எல்.ரீ.ரீ.ஈ யினரின் நகைகளைத் தேடியவர்களுக்கு ஏமாற்றம்

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 25 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஸ்வமடு பிரதேசத்தில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாம் காணப்பட்ட இடத்திலிருந்து எவ்வித தங்க நகைகளும் கைப்பற்றப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தை தோண்டி சோதனை செய்யுமாறு கடந்த 22ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, அங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், எவ்வித தங்க நகைகளும் மீட்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு குறித்த பகுதியில் சிலர் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினரால் புதைக்கப்பட்ட தங்கநகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.எம்.எஸ். ஷம்சுதீன் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கமைய, அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், எவ்வித நகைகளும் மீட்கப்படாததால் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .