2025 ஜூன் 28, சனிக்கிழமை

கஞ்சா கலந்த புகையிலைத் தூளுடன் மூவர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 24 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பசெட்டி பிரதேசத்தில் கடற்பரப்பில் 100 கிலோ கிராம் கஞ்சா கலக்கப்பட்ட புகையிலைத் தூளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) பகல் 2 மணியளவில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த புகையிலைத் தூளினைக் கொண்டு வந்த மோட்டார் படகு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40, 44 மற்றும் 45 வயதான பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் மூவரும் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .