2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சி, தீவகம், கிளிநொச்சி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல், யாழ்ப்பாணம் - மயிலிட்டி றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையில், புதன்கிழமை (12) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க, உபதலைவர் பிரதீப், வடக்கு மாகாணச் செயலாளர் ஸ்ரீகாந்தநேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதிபர்கள், ஆசிரியர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .