2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று, யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆடியபாதம் வீதியில் திறந்து வைக்கப்பட்ட காணாமல் போனவர்களைப் பற்றி கண்டறியும் அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரால் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது, உள்ளக விசாரணை மீது நம்பிக்கை இல்லை. உள்ளக விசாரணை நிராகரிக்கின்றோம்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் வெறும் கண்துடைப்பே காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அரசை பதில் கூறு, வேண்டாம் வேண்டாம் OMP வேண்டாம், நீக்கு நீக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .