2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

காணி விடுவிப்புக்கான உத்தியோகபூர்வ வரைபடம் கிடைக்கவில்லை

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 09 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் பாது­காப்­புத் தரப்பினரி­ட­மி­ருந்து இன்­ன­மும் கிடைக்­கப் பெறவில்லை என  மாவட்­டச் செய­லக தகவல்கள் தெரி­விகின்றன.

தமிழ் சிங்­க­ளப் புத்­தாண்­டுப் பரி­சாக வலி.வடக்­கில் காணி விடு­விக்­கப்­ப­டும் என இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் நடை­பெற்ற வீடு கையளிப்பு நிகழ்­வில் தெரிவித்­தி­ருந்­தார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை (05) வறு­த­லை­வி­ளா­னில் வீடு கைய­ளிப்பு நிகழ்வு நடை­பெற்­ற போது,  மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர் பொ.சுரேஷ் எதிர்வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் 650 ஏக்­கர் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருந்­தார்.

அந்நிலையில்  யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு பாது­காப்­புத் தரப்பின­ரி­ட­மி­ருந்து காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் இன்னமும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்­டு­வ­னி­லி­ருந்து – மயி­லிட்­டிச் சந்தி வரை­யி­லான பிர­தான வீதி­யில், சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பகுதி இரா­ணு­வக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. பாதுகாப்­புத் தரப்­பி­ன­ரின் முன்­ன­ரங்க வேலி­கள் இப்பகுதியில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.

இத­ன­டிப்­ப­டை­யில் இந்த வீதி­யும், இதன் மேற்­குப் புறமா­க­வுள்ள காணிகளும் விடு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்கப்படுவதாக  மாவட்­டச் செயலக அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் கிடைக்­கா­மல் எதனை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது என்­றும் அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .