Editorial / 2024 ஜூலை 18 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நபரை 75ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்று , வழக்கினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் புதன்கிழமை (17) நடைபெற்ற போது குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சாவகச்சேரி பொலிஸாரால் குறித்த நபர் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே , அந்நபரை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.
23 minute ago
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
3 hours ago