Janu / 2024 ஜூன் 12 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து 22 கிலோகிராம் கேரள கஞ்சா தொகையை செவ்வாய்க்கிழமை (11) கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே 10 பொதிகளில் இருந்து 22 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பு. கஜிந்தன் , நிதர்ஷன் வினோத்

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago