Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 21 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் சுரபிநகர் மாதிரி கிராமம் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் சஜித் பிரேமதாச நிகழ்வில் கலந்து கொண்டு மாதிரி கிராமத்தை திறந்து வைத்தார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டு 25 பயனாளிகளுக்கான காணி உரிமங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 25 பயனாளிகளிற்கு காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சிமாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 200 பேருக்கு தொழில் உபகரணங்களும், 800 பேருக்கு 50 ஆயிரம் மற்றும் ஒரு இலட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
39 minute ago
1 hours ago