Mayu / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை 06 இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் சு.கணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் வடக்கு மாகாண கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், கூட்டுறவு ஆணையாளருமாகிய ந.திருலிங்கநாதன் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக பழைய மாணவனும் பாடசாலை பரிசளிப்பு விழாவின் அனுசரணையாளருமான க.இராஜரட்ணம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், அயல் பாடசாலை அதிபர்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர், உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




21 minute ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
6 hours ago
6 hours ago