Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
புங்குடுதீவு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வெடிமருந்தினை பாவித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன், வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.
தடைசெய்யப்பட்ட டைனமைட் வெடிமருந்தினை பாவித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், குருநகர் பகுதியினை சேர்ந்த 30 வயதுடைய மேற்படி மீனவரை வியாழக்கிழமை (18) கைது செய்திருந்தனர்.
அத்துடன் வெடிமருந்து வைத்து பிடித்த 150 கிலோ கிராம் மீன்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.
கைதான நபரை யாழ் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் பதில் நீதவானின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, நீதவான் எதிர்வரும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை புதைக்குமாறு கடற்றொழில் நீரியல் வளதுறைத் அதிகாரிகளுக்கு பணித்தார்.
12 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
37 minute ago