Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்
மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவரை, மானிப்பாய் பொலிஸார் நேற்று (26) மாலை கைதுசெய்துள்ளனர்.
சங்கானை - பாரதி வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 2 சங்கிலி, 1 மோதிரம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானை - சேச் வீதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்ற திருட்டு, சுதுமலை பகுதியில் உள்ள ஐயர் வீடு ஒன்றில் நகை பணம் திருடப்பட்டமை, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயது முதிர்ந்த தம்பதிகள் உள்ள வீடுகளுக்கு பணி வேலை செய்வதற்கு செல்லும் இவர், அங்குள்ள நகைகள் மற்றும் பணம் தொடர்பில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு தகவல் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார்.
பின்னர் திருடப்படும் நகைகள், பணத்தில் பங்கு பிரித்து கொள்வதாக, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago