Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களுக்கும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மீனவர்களை கடுமையாக எச்சரித்து ஊர்காவற்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்களை கடற்படையினர் கடந்த 13ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றையதினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அன்று மாலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
அதனை அடுத்து மீனவர்கள் 9 பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அந்நிலையில் குறித்த வழக்கு இன்று (18) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 9 மீனவர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அதேவேளை , மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையார்கள் படகுகளின் ஆவணங்களுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் படகுகள் அரசுடமையாக்கப்படும் என நீதிவான் அறிவித்தார்.
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago