2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும்’

Freelancer   / 2022 ஜூலை 13 , பி.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நெருக்கடிநிலையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கு அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்று கூடி தீர்க்கமான முடிவெடுக்கவேண்டுமென  மதத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே சமயத்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். 

இதுதொடர்பில் அவர்கள் மேலும் அறிக்கையில், சகல தமிழ்க் கட்சிகளும் குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் ஒன்று கூடி இன்றைய இலங்கை அரசியல் சூழலில் எடுக்கவேண்டிய தீர்மானம் என்ன என்பதை சீராகத் தீர்மானிப்பதற்கு முன் வரவேண்டுமெனவும் மதத்தலைவர்கள்  தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு-கிழக்கு, மலையகம், தெற்கு என்ற பேதமின்றி தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள், கட்சித் தலைவர்கள்  வேறுபாடுகளைக் கடந்து மக்களுக்காக ஒன்று கூடவேண்டிய தருணம் இது. எனவே அறிவு பூர்வமாக தீர்க்க தரிசனத்தோடு ஒன்றுகூடி ஆராயுங்கள். இது காலத்தின் கட்டாயம். இவ்வேளை நீங்கள் ஒன்றுகூடி ஆராய மறுப்பீர்கள் ஆனால் அது மாபெரும் வரலாற்றுத் தவறாகும் என்று தெரிவித்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .