Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்று 105 பேர் உயிரிழந்துள்ளனர்” என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது, கடந்த நான்கு ஆண்டுகளினை விடவும் அதிகரித்தே கானப்படுகின்றது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதென்றார்.
“இவற்றின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் 578 பேர் தற்கொலைக்கு முயன்று அனுமதிக்கப்பட்டபோதும் அதில் 110பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டில் 579 பேர் தற்கொலைக்கு முயன்று 59 பேர் உயிரிக்க ஏனையோர் காப்பற்றப்பட்டனர். இதேபோன்று 2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 150 பேர் உயிரிழந்திருந்தனர்” எனவும் அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்ற போது, 105 பேர் உயிரிழந்தபோதும் ஏனையோர் காப்பாற்றப்பட்டனர். இதேநேரம், இதில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை தற்கொலைக்கு முயன்றவர்களும் உள்ளனர் உனவும், அவர் தெரிவித்தார்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago