Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூன் 27 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில், பிறந்து. 40 நாட்களான பெண் குழந்தையொன்று பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில் பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்கையில் வைத்துள்ளார் . சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் மகளை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் .
அதன்போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025