2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

துணைத்தூதருக்கு வாளை வழங்கிய முதலமைச்சர்

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள, இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவு பரிசாக வாள் வழங்கி கௌரவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு திரும்பவுள்ள, இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆர்.நடராஜனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் வாளைப்பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண மாவட்டச்; செயலர்கள், உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .