2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தேங்காய் உடைத்துவிட்டு வந்தவர் மரணம்

Janu   / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது .

குறித்த பகுதியை  சேர்ந்த  68 வயதுடைய  சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற நபரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர்  ஆலயமொன்றுக்கு  சென்று  தேங்காய் உடைத்துவிட்டு வந்து   இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்திருந்த போதே  மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளதுடன் அவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடல்கூற்றுப் பரிசோதனைக்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது .

நிதர்ஷன் வினோத் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X