2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

நல்லூரில் பிக்குவுவால் அதிசயம்: பக்தர்கள் விசனம்

Mayu   / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

நல்லூர் கந்தசுவாமி கோவில்  பெருந்திருவிழா காரணமாக வாகன  போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்பக்கம் வரை அத்துமீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் சனிக்கிழமை (10) உள்நுழைந்துள்ளன.

இந்த செயற்பாடானது பக்தர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடமும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சைவர்களின் ஆலயத்தில் கூட பிக்குகள் அத்துமீறி வாகனங்களுடன் உள்நுழைந்து, பாதணிகளுடன் ஆலய வளாகத்தில் காலடி வைத்தமை இன மத முரண்பாட்டை தோற்றுவிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெற கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X