2025 மே 03, சனிக்கிழமை

நல்லூர் மந்திரி மனை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும்  மந்திரிமனையினைப் புனரமைக்கும்  பணியினை  ஆரம்பித்துள்ளது. 

தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியுடனும், அனுமதியுடனும், நன்கொடையாளர்கள் மூலம் யாழ்ப்பாண மரவுரிமை மையத்திற்கு கிடைத்த நிதியில் நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும்  மந்திரிமனையினைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் மந்திரிமனையுடன் சேர்ந்து வளர்ந்துள்ள மரமானது மந்திரிமனையின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் அதன் உறுதித்தன்னையினை சீர்கெடாமல் பாதுகாக்கும் நோக்குடன் வெட்டப்பட்டு மருந்து ஏற்றும் செயற்பாடு நடைபெற்று வருகின்றது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X