Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 03 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர் ஒருவரை அழைத்து வர கொழும்பு சென்றவர்களின் வீட்டு முன் கதவினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 1 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் இலத்திரனியில் பொருட்களை திருடி சென்றுள்ளனர் என திங்கட்கிழமை (02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் வண்ணார் பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 29 ஆம் திகதி உறவினர் ஒருவரை அழைத்து வர குறித்த வீட்டில் உள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்தனர். இந் நிலையில் இவர்களின் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் நகை மற்றும் இலத்திரனியில் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இத் திருட்டு கடந்த 29 ஆம் திகதியிருந்து 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என வீட்டு உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago