2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பசுமை இயக்கத்தால் கஞ்சி வழங்கல்

Princiya Dixci   / 2022 மே 17 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று (17)  நடைபெற்றது.

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு, அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி  விநியோகிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .