Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 18 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, பத்தமேணி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள், நேற்று (17) இரவு புகுந்துள்ள இனந்தெரியாத கும்பலொன்று, குறித்த வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதோடு, வீட்டு உரிமையாளருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம், அச்சுவேலி - பத்தமேணியிலுள்ள வீடொன்றில், நேற்று இரவு 10.30க்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில், கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம், முகத்தை மறைத்தவாறு குறித்த வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத குழுவினர், முதலாவதாக வீட்டின் வாயிற்கதவை அடித்து உடைத்தும் வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்துள்ள அக்கும்பல், வீட்டின் கதவு, யன்னல்கள் மற்றும் கதிரை மேசை, குளிர்சாதனப் பெட்டி என அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொருக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அச்சுவேலி பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025