2025 ஜூன் 28, சனிக்கிழமை

பரீட்சை மண்டபத்துக்கு காவு வண்டியில் சென்ற மாணவர்கள்

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணத்தில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர், நோயாளர் காவு வண்டியில் பரீட்சை மண்டபத்துக்குச் சென்று பரீட்சை எழுதிய சம்பவம் ஒன்று, நேற்று  (20) இடம்பெற்றுள்ளது. 

குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியைச் சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு பரீட்சை எழுதியுள்ளனர். 

குறித்த மாணவர்களில் ஒருவர் காய்ச்சலாலும், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையிலும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இரு மாணவர்களும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் என்பதால், வைத்திய நிபுணர் மற்றும் தாதியர்கள் விசேட கவனம் செலுத்தி இருந்தனர். 

மாணவர்கள் இருவரும் பரீட்சை எழுதும் அளவுக்கு உடல் தகுதியை அடைந்திருந்த போதிலும், அவர்களை இரு நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தமையால், மாணவர்கள் இருவரும் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மறு நாள் மாணவர்கள் பரீட்சை எழுத செல்ல வேண்டி இருந்தமையால், மாணவர்கள் இருவரையும் நோயாளர் காவு வண்டியில் தாதியர்கள் இருவரின் துணையுடன் பரீட்சை மண்டபத்துக்கு தெல்லிப்பளை வைத்தியசாலை வைத்திய நிபுணர் அனுப்பி வைத்திருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .