2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பஸ் மீது தாக்குதல்

Sudharshini   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான பஸ் மீது வெள்ளிக்கிழமை (18) இரவு இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்;.

இச்சம்பவம் நேற்று இரவு 8:15 மணியளவில் அச்சுவேலி பிரதேச  வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், மென்பானப்போத்தலினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்;. இதில் பஸ் சாரதி காயமடைந்த நிலையில் உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;.

இரவு 7:30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட 750 இலக்க வழித்தட பஸ்ஸின் மீதே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .