2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதுகாப்பு படையினர் இளைஞனை தாக்கியமை குறித்து விசாரணை

Freelancer   / 2022 நவம்பர் 30 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து யாழ்.
மானிப்பாயில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கடமையில் இருந்த போது,
தலைக்கவசம் அணியாது வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கும் இளைஞர் ஒருவருக்குமிடையில்
வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, இராணுவத்தினரும் பொலிஸாரும் இளைஞன் மீது சரமாரியாக தாக்குதலை
மேற்கொண்ட போது, வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் விசேட அதிரடி
படையினரும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அங்கு மக்கள் கூடியமையால் இளைஞனை கைது செய்த
பொலிஸார், மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, இரத்த காயங்களுடன்
நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இளைஞனை
சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் நேற்று (29) வாக்கு மூலத்தை பதிவு
செய்துள்ளத மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், சட்ட வைத்திய அதிகாரியின்
மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக
தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .