2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’பேசுவதில் என்ன தவறுள்ளது?’

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் கட்டுக்கோப்பான ஒழுக்கங்கள், செயற்பாடுகளைப் பற்றி பேசுவதில் என்ன தவறுள்ளதெனக் கேள்வியெழுப்பியுள்ள வட மாகாண அமைச்சர்  அனந்தி சசிதரன், விடுதலைப்புலிகள் செயற்பட்ட சமகாலத்தில் வாழ்ந்த அனைவருமே அந்த விடயங்களை நன்கு அறிவார்களெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரை தொடர்பில், அவர், இன்று (04) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், வன்புனர்வுக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலைச் செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டு செல்வதாகத் தெரிவித்த அவர், அவற்றின் வலிகளை விஜகலா நேரில் பார்த்துள்ளாதாகவும் அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், இராஜாங்க அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றபோதும், அதன் ஊடாக எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு அவருக்கு இயலவில்லையெனவும் கவலை வௌியிட்டுள்ளார்.

நன்மை பயக்கும் எந்த நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தாலும், பெண் இராஜாங்க அமைச்சராக இருப்பதால், அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆயிரமாயிரம் தடைகள் உருவாக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறான பல்வேறு நெருக்கடியான நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே, விடுதலைப்புலிகளை அவர் நினைவுப்படுத்தியுள்ளாரெனவும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .