2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின், கஞ்சா ஆகிய போதைபொருட்களை உடமையில் வைத்திருந்த மூவரை நேற்று (09) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் நேற்று (09) மாலை மானிப்பாய் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும், மற்றொருவரின் உடமையில் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.

கைதான மூவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X