2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’பௌத்த சின்னங்கள் வைப்பதை நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்’

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக பௌத்த சின்னங்கள் வைப்பதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், இல்லையெல் அனைவரையும் அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரு​மெனவும் எச்சரித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற இவ“வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக, யாழ். மாநகர சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழ் மக்களின் நலன்சார்ந்த இந்த விடயத்தில் கட்சி பேதங்களின்றி அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X