2025 மே 15, வியாழக்கிழமை

மகாத்மா காந்தியின் நினைவு தினம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

மகாத்மா காந்தியின் நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 

அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்த காந்தி நினைவு தினம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலை நிறைவடைந்தது. 

காந்தி சிலையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் கொன்சலேட் ஜெனரல் சங்கர் பாலச்சந்திரன், வடமாகாணசபையின் அவைத் தலைவர் சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .