2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மணல் கடத்தல் வாகனத்தை துரத்திப் பிடித்த பொலிஸார்

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம், பாலாவி பகுதியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தை நீண்ட தூர துரத்தலின் பின்னர் மீசாலை பகுதியில் வைத்து கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றினர்.

எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர்.

மணல் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் வாகனத்தை மறித்தனர். எனினும், அந்த வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றமையால் பொலிஸார் வாகனத்தை துரத்தினர். 

இதன்போது, மணல் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்த மணலை, சவல்கள் மூலம் பொலிஸாரின் வாகனத்தின் மீது எறிந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் முடியாத நிலையேற்பட்ட போது, வாகனத்தை கைவிட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பித்துச் சென்றனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாலாவி பகுதியில் இருந்து உழவு இயந்திரமொன்றில் மணல் கடத்திய 3 சந்தேகநபர்களையும் கொடிகாமம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .