2024 மே 18, சனிக்கிழமை

யா​​ழில் இரு கைதிகள் மீது தாக்குதல்

Janu   / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து , விளக்கமறியல் கைதிகள் இருவர்  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை அவரது தாயார் பார்வையிட சென்ற சமயம் அவருக்கு பீடி வழங்கியுள்ளார். 

அதனை சிறைக்கூடத்திற்குள் வைத்திருந்தவேளை , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கண்டறிந்து , அவற்றை பறிக்க முயன்றபோது முரண்பாடு ஏற்பட்டு  , குறித்த கைதியை தாக்கியுள்ளனர். அதேவேளை , பீடி வைத்திருந்த தகவலை தமக்கு வழங்கவில்லை என அந்த சிறைக்கூடத்தில் இருந்த மற்றையவரையும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் , தாக்குதலுக்கு இலக்கான இருவரையும் வழக்கு தவணைக்காக யாழ்.நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து சென்ற போது , இருவரும் தம் மீதான தாக்குதல் தொடர்பில் மன்றில் தெரிவித்துள்ளனர். 

அதனையடுத்து ,  அவர்களை சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதித்து , சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மருத்துவ சான்றிதழ் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .