2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் நவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை அமைக்கவுள்ளதாக பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் வ.தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

அது மேலும் தெரிவிக்கையில்,

யாழில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கள்ளு தவறணைகளை (விற்பனை நிலையம்) அமைப்பதுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது கொடிகாமம் இராமாவில் பகுதியில் நவீன வசதி வாய்ந்த கள்ளு தவறணை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கைதடி, நுணாவில் பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X