2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்

Freelancer   / 2022 ஜூலை 26 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்த்துள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .